Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Advertiesment
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Mahendran

, புதன், 1 மே 2024 (14:36 IST)
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிற்து.
 
அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா என்பது குறித்து விளக்கம் அளித்த  IMA துணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், கோவிஷீல்டின் மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து அப்போதே ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும், உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
 
அதேபோல் கோவிஷீல்டால் ஏற்படும் பக்கவிளைவு என்பது மிகவும் அரிது என்றும், இந்தியாவில் ஒரு மில்லியன் டோஸ்களுக்கு 0.61 என்ற விகிதத்திலேயே பக்கவிளைவுகள் குறித்த வழக்கு பதிவாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!