Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் மோதி தீப்பிடித்த கார்… புதுமண தம்பதி உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 31 மே 2023 (16:35 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உள்ளிட்ட 4 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் அருகில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீபத்தில் திருமணமான புதுமண தம்பதியர் உள்ளிட்ட 4 பேர்  உடல் கருகி உயிரிழந்தனர்.

இன்று அதிகாலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து இருந்தது.

இந்த விபத்து பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments