Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை: மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (08:52 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் கொண்ட குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பபிதா என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது
 
ஆனால் அந்த குழந்தை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த குழந்தைக்கு ஒரே ஒரு இதயம் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் 
 
இதனையடுத்து அந்த குழந்தை தற்போது இண்டன்சிவ் கேர் யூனிட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த குழந்தைக்கு ஒரு தலை மட்டும் ஒரு கையை அகற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
பபிதா கர்ப்பமானதில் இருந்து ஸ்கேன் எடுத்துப் பார்க்காததால் இது குறித்த விவரங்கள் தெரியாமல் இருந்துள்ளதாகவும் தற்போது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து அந்த குழந்தையின் பெற்றோரிடம் ஆலோசித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் 
 
இரண்டு தலைகள் மூன்று கைகளுடன் குழந்தை பிறந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த குழந்தையை பார்க்க ஆர்வத்துடன் மருத்துவமனை முன் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments