Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சி ஒரு அவசர ”பொங்கல்”.. பங்கமாய் கலாய்த்த அழகிரி

Arun Prasath
திங்கள், 25 நவம்பர் 2019 (08:40 IST)
மஹாராஷ்டிராவில் பாஜகவின் ஃபட்நாவிஸ் ஆட்சி அமைத்தது ஒரு அவசர பொங்கல் என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிரா தேர்தலில் பாஜக-சிவசேனா வெற்றி பெற்றதை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியமப்பதற்கான இழுபறி நடந்து வந்தது. இதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மேலும் உத்தவ் தாக்கரே தான் முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிஸ்  முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் ஆளுநர் பதவியெற்றி வைத்தார். அஜித் பவார் துணை முதல்வரானதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஃபட்நாவிஸ் முதல்வரானது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை வைத்த வண்ணம் உள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “மஹாராஷ்டிராவில் பாஜக அமைத்திருக்ககூடிய அரசு அவசர கால பொங்கல் தயாரிப்பது போன்றது” என விமர்சித்துள்ளார்.

முன்னதாக பாஜக பிற மாநிலங்களில் ஆட்சியமைத்தது குறித்தும் பல விமர்சனங்கள் எதிர்கட்சிகளிடம் எழுந்துள்ள நிலையில் தற்போது கே.எஸ்.அழகிரி இவ்வாறு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments