Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி கழிவறையில் பிணமாகக் கிடந்த 9 ஆம் வகுப்பு மாணவன்

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (12:22 IST)
குஜராத்தில் 9 ஆம் வகுப்பு மாணவனின் உடல் பள்ளிக் கழிவறையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள பள்ளி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்னர் மாணவர் ஒருவர் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தார்.
 
இந்நிலையில் நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றான். முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், அந்த மாணவனை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அந்த மாணவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். பின் அந்த மாணவனி உடலை பள்ளி கழிவறையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
 
இதனையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments