Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிநாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (08:12 IST)
உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
 
உத்திரபிரதேசத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 13 குழந்தைகள் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்பொழுதும் தொடர்கதையாகி வருகிறது.
 
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நன்தோஷி கிராமத்தை சேர்ந்த 8 வயது கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை கடித்து குதறியது. 
 
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments