Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

72 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ள மூதாட்டி

72 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ள மூதாட்டி
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (20:41 IST)
கேரளா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் காயங்குளம் அடுத்துள்ள ராமபுரத்தில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவருக்கு சுதர்மா என்ற மனைவி இருக்கிறார்.(72) இவர்களுக்கு ஒரே மகன் சுரேந்தர்(350 . தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார்.

ஆனால் அவர்க்ளின் ஒரே மகன் சுரேந்தர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் மனவேதனை அடைந்த தம்பதியர் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச முடியாமல் வருந்தினர்.

இந்நிலையில் சுதர்மா அவரது கணவரிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டுமெனக் கூறியுள்ளார். பின்னர் இருவரும் ஆழப்புலாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இதற்காக முயற்சி மேற்கொண்டனர். உயிருக்கு ஆபத்து நேரலாம் எனக் கூறியபோதும் குழந்தை வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தனர்.

அரசு மருத்துவர் கடந்த 32 வாரங்களுக்கு முன்னர் டெஸ்ட் டியூப் முறையில் சுதர்மாவுக்கு கருத்தரிக்கச் செய்தார்.    இதன்பலனால் சில நாட்களுக்கு முன் மூதாட்டி சுதர்மாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் அழகிய குழந்தை பிறந்தது( 1.கிலோ100கிராம் எடை). இந்த சந்தோஷத்தில் தம்பதிபர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது வயதான பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளதால் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக ஆட்சி !