Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளீஸ் பா குடிக்காதீங்கன்னு சொன்ன மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (08:19 IST)
குடிப்பழக்கத்தை விடச்சொன்ன மகளை அவரது தந்தையே கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் மொராபடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் யாதவ். இவரது மகள் சுஜாதா முண்டா (18). பிரதீப்புக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மகள் சுஜாதா தனது தந்தையிடம் குடிப்பழக்கத்தை விடுமாறுதொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத பிரதீப் தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று பிரதீப் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சுஜாதா, தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த பிரதீப், பெற்ற மகள் என்றும் பாராமல், சுஜாதாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதீப் யாதவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments