Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9,11 வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ்: மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (20:41 IST)
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆன் வகுப்பு வரை தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளது
 
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் சரிவர மாணவர்களுக்கு பாடங்கள் புரியவில்லை என்று கூறப்பட்டது
 
இதன் காரணத்தினால் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி என மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1முதல் 8ம் வகுப்பு வரையான அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இன்று தேர்ச்சி பெறுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே தேர்வு நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments