Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் முடிவால் 95 லட்சம் புடவைகள் முடக்கம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (22:55 IST)
தெலுங்கானாவில் ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகையின்போது ஏழை பெண்களுக்கு இலவச புடவை வழங்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டும் ஏழை பெண்களுக்கு வழங்குவதற்காக சுமார் 280 கோடி மதிப்பில் 95 லட்சம் புடவைகள் கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் திடீரென தனது அமைச்சரவையை ராஜினாமா செய்தார். இருப்பினும் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால் புடவை வழங்கும் திட்டத்திற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கருதப்பட்டது.

ஆனால் ஒரு ஆட்சி ராஜினாமா செய்துவிட்டாலே, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் என தேர்தல் கமிஷன் கூறிவிட்டதால் தற்போது கொள்முதல் செய்த புடவைகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதல்வர் சந்திரசேகர ராவ் திகைத்து போய் உள்ளார்.  இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் எனவே, நடத்தை விதிகள் இதற்கு பொருந்தாது என தேர்தல் கமிஷனிடம் முறையிடவும் அவரது கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments