திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை.. 8ஆம் வகுப்பு மாணவனின் விபரீத செயல்..!

Mahendran
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:58 IST)
திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக எட்டாம் வகுப்பு மாணவன் செய்த விபரீதமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹைதராபாத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் சில முறை திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் மீண்டும் திருப்பதி செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.  இதை பெற்றோரிடம் தெரிவித்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அடுத்து கடந்த நான்காம் தேதி டியூஷனுக்கு செல்வதாக கூறி பெற்றோருக்கு தெரியாமல் திருப்பதிக்கு ரயில் ஏறிவிட்டார்.
 
அதன் பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் அதன் பின்னர் தான் தன்னிடம் காசு இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டுக்கு எப்படி செல்வது என்று யோசித்த நிலையில் தான் அங்கிருந்த பக்தர் ஒருவரிடம் செல்போன் வாங்கி தனது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அந்த சிறுவன் கூறிய போது ’பெற்றோரிடம் 15 முறை இங்கு வந்துள்ளேன், மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்ததால் ரயில் ஏறி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
 
தான் சேமித்து வைத்திருந்த ஆயிர ரூபாய் பணத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வீட்டிற்கு தெரியாமல் திருப்பதிக்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவன், அதன் பின் தனியாக வந்ததை நினைத்து வருந்திய நிலையில் தான் போலீசார் அவரை கண்டுபிடித்து பெற்றவரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments