Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (07:43 IST)
இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது

நேற்று காலை 8மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் புதிதாக 841 பேர் கொரானா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 227 நாட்களில் அதாவது 7 மாதங்களில் காணப்படாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும்.

கடந்த மே 19-ம்தேதி 865 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில்  டிசம்பர் 5 வரையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்துக்குள் வந்த பாதிப்பு தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்தியாவில் கொரானா தொற்றுக்கு கிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,309, கேரளா, கர்நாடகா, பிஹார் மாநிலங்களில் தலா ஒருவர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அனைவரும் மாஸ்க் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.,

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments