Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் ராமருக்கு தங்க காலணி..! 8 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரையாக அயோத்தி செல்லும் பக்தர்..!!

Senthil Velan
திங்கள், 8 ஜனவரி 2024 (11:08 IST)
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (வயது 64) அயோத்திக்கு பாதயாத்திரையாக செல்கிறார். கடவுள் ராம பக்தரான ஸ்ரீனிவாஸ் ஐதராபாத்தில் இருந்து ஒடிசா, மராட்டியம், குஜராத் வழியாக 8 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக அயோத்தி செல்கிறார்.
ALSO READ: டி20 கிரிக்கெட் போட்டி...! இந்திய மகளிர் அணி தோல்வி..!!

பாதயாத்திரையின்போது கடவுள் ராமருக்கு தங்க காலணிகளையும் ஸ்ரீனிவாஸ் கொண்டு செல்கிறார். 65 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க காலணிகளை ஸ்ரீனிவாஸ் கடவுள் ராமருக்கு காணிக்கையாக கொண்டு செல்கிறார்.
 
கடந்த ஜூன் மாதம் 20 தேதி தனது பாதயாத்திரையை தொடங்கிய ஸ்ரீனிவாஸ், பல்வேறு நகரங்களை கடந்து அயோத்தியை நெருங்கியுள்ளார். ஸ்ரீனிவாஸ் அயோத்தியை அடைய சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அவர் வரும் 16ம் தேதி அயோத்தி சென்றடைகிறார். அயோத்தி சென்றடையும் ஸ்ரீனிவாஸ் கடவுள் ராமருக்கு காணிக்கையாக கொண்டுவந்த தங்க காலணிகளை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments