Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் 798 மருத்துவர்கள் பலி !

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (22:11 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
 

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா 2 வது அலையில் 798 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து மருத்துவர் சங்கம் கூறியுள்ளதாவது:

கடந்த ஆண்டு நாடு முதல் அலை பரவியபோது, 748  மருத்துவர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மக்களைக் காப்பாற்ற இரவு பகலாகப் போராடி வரும் மருத்துவர்கள் இந்த கொரொனா இரண்டாம்  அலையின்போது இதுவரை 798 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments