Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா: பஞ்சாயத்தில் என்ன தண்டனை தெரியுமா?

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா: பஞ்சாயத்தில் என்ன தண்டனை தெரியுமா?
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (11:48 IST)
பீகார் மாநிலத்தில் 70 வயது முதியவர் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருக்கு பஞ்சாயத்தில் ரூ.82 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.


 

 
பீகார் மாநிலத்தில் ஜிபாசூர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசந்தர் ஷா(70), அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமிகளை மிட்டாய் வாங்கி வருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். 
 
5 மற்றும் 6 வயதுடைய அந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளார். ஆனால் அந்த சிறுமிகளின் தாய், அந்த கொடூரத்தை சிறிது நேரத்திலே கண்டுப்பிடித்துவிட்டார். 
 
மேலும் பக்கத்து வீட்டுக்காரர்தான் குற்றவாளி என்பதை அறிந்துக்கொண்டார். இது பற்றி அந்த சிறுமிகளின் தாய், ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டார்.
வன்கொடுமை செய்த குற்றத்திற்காக தலைக்கு ரூ.41 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.82 ஆயிரம் அபராத தொகையாக செலுத்துமாறு பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பு கூறியுள்ளார்.
 
ஆனால் சிறுமிகளின் பெற்றோர்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டு காவல்துறையினரிடம் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் அந்த முதியவர் மற்றும் பஞ்சாயத்து தலைவரை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி கொலையில் நான்கு பேர் குற்றவாளிகள் : போட்டுத் தாக்கும் டிராபிக் ராமசாமி