Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரக் கொலை! அனிமல் ஃபவுண்டேஷன் புகார்..!

Advertiesment
70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரக் கொலை! அனிமல் ஃபவுண்டேஷன் புகார்..!

Mahendran

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (15:43 IST)
தெலுங்கானா மாநிலத்தில் 70 தெரு நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக ஹைதராபாத்தில் சேர்ந்த அனிமல் பவுண்டேஷன் ஆப் இந்தியா என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தெருநாய் தொல்லை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர் என்பதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய் கடியால் அவதிப்பட்டனர் என்றும் புகார்கள் வந்தன. 
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நிஜாமாபாத் என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் 70 தெரு நாய்களை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாகவும் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் இந்த கொடூரம் நடந்துள்ளதாகவும் அனிமல் பவுண்டேஷன் புகார் அளித்துள்ளது 
 
பிப்ரவரி 16 , 17 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பாக தனக்கு மின்னஞ்சல் வந்ததாகவும் கொல்லப்பட்ட நாய்களில் ஒன்று கிராமத்தில் வசிக்கும் வீட்டு நாய் என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்: தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை