Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
, சனி, 20 ஜனவரி 2018 (15:31 IST)
அசாம் ஜோர்ஹட் விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
அசாம் மாநிலம் ஜோர்ஜட் விமானநிலையத்தை வந்தடைந்த ஒரு விமானத்திலிருந்து இறங்கிய இரண்டு பயணிகளின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவ்விருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில்  ரூ.70 லட்சம் மதிப்புள்ள 14 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவ்விருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)