Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்; சிறுமி தற்கொலை

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்; சிறுமி தற்கொலை
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (13:03 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவன், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் அந்த சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15ஆம் தேதி அவரது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
 
பிரதேச பரிசோதனையில், சிறுமி தொடர்ந்து 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி தகவலை அறிந்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். 
 
விசாரணையில் அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 12 வயது சிறுவன் இத்தகைய செயலில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமியில் பெற்றோர் வேலைக்கு சென்றதும், வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமியை 12ஆம் தேதி முதல் அந்த சிறுவன் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
 
அந்த சிறுமி தற்கொலை செய்துக்கொண்ட அன்றைக்கும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைரியம் இருந்தால் கருணாநிதி வந்திருக்கலாமே? : சட்டசபையில் விலாசிய ஜெயலலிதா