தைரியம் இருந்தால் கருணாநிதி வந்திருக்கலாமே? : சட்டசபையில் விலாசிய ஜெயலலிதா
கருணாநிதி ஏன் வரவில்லை? : ஜெயலலிதா
கடந்த 17ஆம் தேதி, தமிழக சட்டசபையில், தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டதால், திமுக உறுப்பினர்களை குண்டு கட்டாக வெளியேற்றியதோடு, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அன்று கூட்டத்தில் கலந்து கொள்ளாத திமுக உறுப்பினர் 10 பேருக்கு, சட்டசபையில் கலந்து கொள்ள எந்த தடையுமில்லை. அவர்கள் விவாதத்தில் பங்கேற்கலாம். ஆனால், இன்று சட்டசபைக்கு அதில சில திமுக எம்.எல்.ஏக்கள் வந்தனர். ஆனால், அவர்களும் விவாதத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்து விட்டனர்.
இதுபற்றி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் உரையாற்றிய போது கருத்து தெரிவித்தார்.
அவர் கூறும்போது “ திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் தினமும் எப்படி நடந்து வருகின்றனர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவைக்கு குந்தகம் விளைவித்ததால் 89 திமுக உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், கட்சி தலைவரை இடை நீக்கம் செய்யவில்லையே..அவர் வந்திருக்கலாமே.. துணிவு இருந்திருந்தால், சட்டசபை விவாதத்தில் நம்பிக்கை இருந்தால், கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும். பேசியிருக்க வேண்டும்.
வேண்டும் என்றே திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வந்தார்கள், வந்தவுடன் வெளிநடப்பு செய்து விட்டார்கள். அவர்களாவது விவாதத்தில் பங்கேற்றிருக்கலாமே..
2006ஆம் ஆண்டு, அதிமுகவினர் அவையில் இடை நீக்கம் செய்யப்பட்ட போது, தனி ஆளாக நான் மட்டும் வந்து அவை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினேன்” என்று கூறினார்.