Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 7 பேருக்கு மரணதண்டனை என தீர்ப்பு..!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (14:53 IST)
பயணிகள் ரயிலில் குண்டு வெடிக்கப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு போபால் ரயில் நிலையத்திலிருந்து சென்ற ரயிலுக்கு ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய சிலர் வெடிகுண்டு வைத்தனர். இது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா வந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக விசாரணைகள் தெரிய வந்துள்ளது. மேலும் ரயில் பாதையில் வெடிகுண்டு வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முகமது பைசல், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டேனிஷ், முகமது சையத் மீர் ஹுசைன் மற்றும் ரோகி ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
 
அதேபோல் முகமது அதிப் என்கிற ஆசிப் இரானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments