Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் கிராமம்

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (07:25 IST)
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்துள்ளதால் அந்த கிராமத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஜார்கண்ட் மாநிலத்தில்  88 வயதான ஒரு பெண் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்று வந்தார். அதன்பின் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையின் பலனின்றி ஜூலை 4ஆம் தேதி மரணம் அடைந்தார். எ
 
88 வயதான அந்த பெண்மணிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். ஐந்து மகன்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் மகன் முதலில் இறந்ததாகவும், இதனையடுத்து ஒருசில நாட்களில் அடுத்தடுத்து நான்கு மகன்களும் இறந்ததாகவும் தெரிகிறது
 
கொரோனாவிற்கு 88 வயது பெண் மற்றும் அவருடைய ஐந்து மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த கிராம மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அந்த கிராமம் முழுவதையும்ம் சீல் வைத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments