Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறுந்துபோன 70 அடி உயர லிஃப்ட்: புத்தாண்டில் நேர்ந்த சோகம்

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (16:06 IST)
மத்திய பிரதேசத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த லிஃப்ட் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் என்ற தொழிலதிபர், தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தார். அங்கே கொண்டாட்டத்தை பார்த்து ரசித்து விட்டு லிஃப்ட்டில் தரை தளத்திற்கு வர முயன்றபோது, 70 அடி உயரத்தில் இருந்த லிஃப்ட், அறுந்துப்போய் முழு வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் புனித் அகர்வால் உட்பட அவருடைய குடும்பத்தினரான பாலக் அகர்வால், பல்கேஷ் அகர்வால், நவ், நித்தி, கௌரவ், ஆரியவீர் ஆகியோர் சிக்கினர். இதில் நித்தி மட்டும் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments