Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:13 IST)
தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 5,975 சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாகவும், தேவைப்பட்டால் இன்னும் சிறப்பு ரயில்களை இயக்க தயார் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5,975 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், 108 ரயில்களில் முன்பதிவின்றி செல்லக் கூடிய  பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். இந்த சிறப்பு ரயில்களின் மூலம், ஒரு கோடி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல்.! "மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல்" - அன்புமணி ராமதாஸ்.!!

"தமிழக திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும்" - பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!

கேரள ஏடிஎம்-இல் கொள்ளை.. கண்டெய்னரில் தப்பிய கொள்ளையர்கள்.. மடக்கி பிடித்த தமிழக போலீஸ்..!

நாளை திருமலைக்கு வரும் ஜெகன்மோகன் ரெட்டி.. நிபந்தனை விதித்த தேவஸ்தான அதிகாரிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments