Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் 500 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (20:17 IST)
சபரிமலையில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கு அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் சபரிமலையில் தற்போது பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டித்தாவளம் பகுதியில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல் கண்காணிப்பளருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 
இதைத்தொடர்ந்து சோதனை செய்ததில் மண்ணுக்கு அடியில் கேன்களில் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், வெடி மருந்துகள் சபரிமலையில் நடக்கும் வழிபாட்டுக்கானது என்பது தெரிய வந்தது. சபரிமலையில் வெடி வழிபாடு ஏலம் எடுத்தவர் தினசரி 15 கிலோ மட்டுமே வெடி மருந்தை வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
 
சபரிமலைக்கு செல்லும் வழியில் மலைப் பகுதியில் ஒரு கொட்டகை அமைத்து இந்த வெடி வழிபாடு நடத்தப்படும். ஏலம் எடுத்தவர் கூடுதல் வெடி பொருள்களை பதுக்கி வைத்திருந்தது சட்டபடி குற்றமாகும். வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலே குப்பை எரிக்கும் இடக்கும் உள்ளது. இதனால் காவல்துறையினர் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments