Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் பறந்த 500 ரூபாய் நோட்டுகள்- போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (13:14 IST)
கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு சாலையில் திடீரென 500 ரூபாய் நோட்டுகள் பறந்து வந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளினர்.
 
கேரள மாநிலம் கொல்லம் அருகே சாத்தனூர் பாரிப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு சாலையில் நேற்று முன்தினம் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்தன. இதனை கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நோட்டுகளை போட்டி போட்டு அள்ள ஆரம்பித்தனர்.
 
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அப்போது அங்கிருத்தவர்கள் நைசாக நழுவிச்சென்று விட்டனர். போலீசார் அந்த நோட்டுகளை பரிசோதித்து பார்த்த போது அவை அனைத்தும் புதிய ஒரிஜினில் 500 ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.
 
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வாகனத்தில் எடுத்துச் சென்றபோது பணம் 2பறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments