Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்; பரிதாபமாக பலியானதால் பரபரப்பு!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (18:16 IST)
5 வயது சிறுமி தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தெருநாய்கள் அந்த சிறுமியை கடித்து குதறியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியான சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்த 6 தெரு நாய்கள் சிறுமியை மாறி மாறி கடித்து குதறின. 
 
இதனால் படுகாயமடைந்த சிறுமியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
இதனை அடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 5 வயது சிறுமி மத்திய பிரதேசத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments