Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் சிறுமி

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (15:18 IST)
உத்திரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றத்தை அடுத்து பாகிஸ்தான் சிறுமி, பிரதமர் மோடிக்கு தனது பாராட்டை தெரிவித்து அமைதிக்கு பணிபுரியுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.


 

 
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி அகீதாத் நாவீத், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,
 
மக்களின் இதயத்தை வெல்வது என்பது மகத்தான பணியாகும் என என்னுடைய தந்தை கூறியுள்ளார். ஒருவேளை நீங்கள் இந்திய மக்களின் இதயத்தை வென்று இருக்கலாம், அதனால் நீங்கள் உத்தரபிரதேசம் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது நீங்கள் மேலும் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயத்தை வெல்ல வேண்டும், 
 
இரு நாடுகள் இடையேயும் அமைதி பாலத்தை ஏற்படுத்த வேண்டும், நாம் புல்லட்கள் வாங்க கூடாது, புத்தகங்கள் வாங்கவேண்டும் என முடிவு செய்ய வேண்டும். நாம் இனி துப்பாக்கிகளை வாங்க கூடாது, ஏழை மக்களுக்கு மருத்துவம் வழங்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இவர் ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு இந்திய தரப்பில் அவருக்கு பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments