Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம்

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (17:29 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில்  இன்று காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த  வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில்,  5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட  4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments