Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 குழந்தைகள் அடினோ வைரஸால் பலி? – மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:59 IST)
மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 5 குழந்தைகள் மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகளால் உலகமே முடங்கி கிடந்த நிலையில் சமீப காலமாக அதிலிருந்து மீண்டு உலகம் வழக்கம்போல இயங்கி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே புதிய வகை வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் அடினோ வைரஸ் என்ற தொற்று பலரை பாதித்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளை இந்த வைரஸ் அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் அடினோ வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அரசு மருத்துவமனைகளில் 5 குழந்தைகள் நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 9 மாத குழந்தையும் அடக்கம். ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மேற்கு வங்காள சுகாதாரத்துறை “5 குழந்தைகளும் நிமோனியா நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அதில் 9 மாத குழந்தையும் அடக்கம். குழந்தையின் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அறிக்கை வந்தால்தான் அக்குழந்தை அடினோ வைரஸால் இறந்ததா என்பது தெரிய வரும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments