Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 குழந்தைகள் அடினோ வைரஸால் பலி? – மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:59 IST)
மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 5 குழந்தைகள் மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகளால் உலகமே முடங்கி கிடந்த நிலையில் சமீப காலமாக அதிலிருந்து மீண்டு உலகம் வழக்கம்போல இயங்கி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே புதிய வகை வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் அடினோ வைரஸ் என்ற தொற்று பலரை பாதித்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளை இந்த வைரஸ் அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் அடினோ வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அரசு மருத்துவமனைகளில் 5 குழந்தைகள் நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 9 மாத குழந்தையும் அடக்கம். ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மேற்கு வங்காள சுகாதாரத்துறை “5 குழந்தைகளும் நிமோனியா நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அதில் 9 மாத குழந்தையும் அடக்கம். குழந்தையின் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அறிக்கை வந்தால்தான் அக்குழந்தை அடினோ வைரஸால் இறந்ததா என்பது தெரிய வரும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments