Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 குழந்தைகள் அடினோ வைரஸால் பலி? – மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:59 IST)
மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் 5 குழந்தைகள் மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகளால் உலகமே முடங்கி கிடந்த நிலையில் சமீப காலமாக அதிலிருந்து மீண்டு உலகம் வழக்கம்போல இயங்கி வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே புதிய வகை வைரஸ்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் அடினோ வைரஸ் என்ற தொற்று பலரை பாதித்து வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளை இந்த வைரஸ் அதிகமாக பாதிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் அடினோ வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொல்கத்தாவில் இரு அரசு மருத்துவமனைகளில் 5 குழந்தைகள் நுரையீரல் பாதிப்பால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 9 மாத குழந்தையும் அடக்கம். ஒரே நாளில் 5 குழந்தைகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மேற்கு வங்காள சுகாதாரத்துறை “5 குழந்தைகளும் நிமோனியா நுரையீரல் அழற்சியால் இறந்துள்ளன. அதில் 9 மாத குழந்தையும் அடக்கம். குழந்தையின் சோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அறிக்கை வந்தால்தான் அக்குழந்தை அடினோ வைரஸால் இறந்ததா என்பது தெரிய வரும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments