Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5.7 கோடி பாத்ரூமில் பதுக்கிய ரிசர்வ் வங்கி அதிகாரி கைது

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (16:01 IST)
பெங்களூரில் ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுகளை குளியலறையில் ரகசியமாக மறைத்து வைத்திருந்த ரிசர்வ் வங்கி அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 



 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு விதிமுறைகளை விதித்தது. இருந்தும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தது. 
 
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கருப்பு பணம் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் கோடி கணக்கில் சிக்கியுள்ளது.
 
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது குளியலறைக்குள் உள்ள ரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது.
 
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் என்பவரை இன்று பெங்களூரில் கைது செய்தனர்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments