Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்.! 96 தொகுதிகளில் வாக்குப்பதிபதிவு..!!

Senthil Velan
ஞாயிறு, 12 மே 2024 (12:42 IST)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
 
நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
 
மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல் ஒடிசாவில் 4 மக்களவைக்கும், 28 சட்டமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ALSO READ: இலங்கைக்கு கப்பல் பயணம் திடீர் ரத்து.! முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி..!!

இதையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments