Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

4ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
, திங்கள், 29 ஏப்ரல் 2019 (07:21 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
 
4ம் கட்ட மக்களவை தேர்தல் 9 மாநிலங்களில் மொத்தம் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு:
 
பீகார்: 5
ஜம்முகாஷ்மீர்: 1
ஜார்கண்ட்: 3
மத்தியபிரதேசம்: 6
மகாராஷ்டிர: 17
ஒடிஷா: 6
ராஜஸ்தான்: 13
உத்தரபிரதேசம்: 13
மேற்குவங்காளம்: 8
 
webdunia
இதில் ஜம்முகாஷ்மீரில் உள்ள ஒரு தொகுதியில் மூன்றில் ஒரு பகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனர் பதவிக்கு ஆசைப்படும் ஓபிஎஸ்: தங்கதமிழ்ச்செல்வன் தகவல்