உடல் உறுப்பு தானம் செய்தால் 42 நாள் சிறப்பு விடுமுறை: அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (11:21 IST)
மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் செய்யும் வழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உடல் உறுப்பு தானம் செய்தால் 30 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அதிகபட்சமாக 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உடல் உறுப்பு தானத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சம்பந்தப்பட்ட துறை தலைவரின் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments