Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகன்களை குறி வைத்துக் கொல்லும் மசினி யானை! – முதுமலையில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (10:49 IST)
முதுமலை யானை வளர்ப்பு முகாமில் பாகனை மசினி என்ற யானை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் சரணாலயமான முதுமலையில் ஏராளமான யானைகள் பாதுகாக்கப்படும் நிலையில், பயிற்றுவிக்கப்பட்ட யானைகள் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அங்கு பராமரிக்கப்படும் மசினி என்ற யானைக்கு அதன் பாகன் பாலன் என்பவர் உணவளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென மசினி அவரை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2019ம் ஆண்டில் சமயபுரம் கோவிலில் இருந்த மசினி யானை அந்த கோவிலின் யானை பாகனை தாக்கி கொண்றதால் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இங்கேயும் மசினி பாகனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments