Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி - 4 பேர் அதிரடி கைது

Advertiesment
உத்திரபிரதேசம்
, புதன், 3 அக்டோபர் 2018 (12:21 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான நேற்று அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் நேற்று காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள் அமைப்பை சார்ந்த சிலர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி செய்தனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கோட்சேவிற்கு சிலை வைக்க முயன்ற 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை டீக்கடையில் தீவிபத்து - பரபரப்பு