Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் ஒருசில நாட்களில் 3வது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் ஒருசில நாட்களில் 3வது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை!
, திங்கள், 27 டிசம்பர் 2021 (08:10 IST)
இந்தியாவில் ஒருசில நாட்களில் 3வது அலை: நிபுணர்கள் எச்சரிக்கை!
உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் நான்காவது ஐந்தாவது அலை வீசி வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் மூன்றாவது அலை வீச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் பொது மக்களுக்கும் அரசுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரனோ இரண்டாவது அலை முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்தாலும் மீண்டும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் மகாராஷ்ட்ரா மற்றும் டெல்லியில் உள்பட ஒருசில மாநிலங்களில் ஒமிக்ரான் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியதோடு இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மூன்றாவது அலை வரக்கூடும் என்று எச்சரித்துள்ளனர் 
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் இன்னும் இரு வாரங்களில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இதனால் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே கருதப்படும் என்றும் இதனால் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர் 
 
இந்தியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் மூன்றாவது அலை ஏற்படும் என்ற எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமிக்ரான் குறித்து ஆய்வு: சென்னை வருகிறது மத்திய குழு!