Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (16:25 IST)
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இருவர் கண்ணீர்  புகைக்குண்டு வீசினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் ஈடுபட்டதாக 31 எம்பிக்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்பிக்கள்,  தமிழச்சி தங்கபாண்டியன், சி,என், அண்ணாதுரை, செல்வம். எஸ். எஸ். பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன், திருநாவுக்கரசு ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 31 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments