Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள் – நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (11:36 IST)
தெலங்கானாவில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சனிகபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலையின் கீழே இறந்த நிலையில் 30 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தனை குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதால் யாரேனும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குரங்குகளின் கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் குரங்குகளின் உடல்கள் மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments