Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 3 மாத குழந்தை கடத்தல்: ஒரே நாளில் மீட்ட போலீசார்

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (16:52 IST)
திருப்பதியில் தங்கி வியாபாரம் செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை நேற்றிரவு திடீரென காணாமல் போனது. குழந்தையை அருகில் வைத்து கொண்டு அதன் பெற்றோர் தூங்கிய நிலையில் மர்ம நபர் அந்த குழந்தையை கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது
 
இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது ஒரு மர்ம நபர் அந்த தம்பதியின் குழந்தையை தூக்கி கொண்டு சென்றது தெரிய வந்தது.
 
இதனையடுத்து குழந்தையை கடத்திய நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை செய்த நிலையில் சற்றுமுன் காணாமல் போன குழந்தை மீட்கப்படது. 
 
திருமலையில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணிபுரிந்த பெண், குழந்தையை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், துப்புரணி பணிசெய்யும் பெண்ணிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments