Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்க் எண்ணெய் தொட்டியில் விழுந்து 3 பேர் பலி

Webdunia
திங்கள், 29 மே 2023 (16:07 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு  பெட்ரோல் பங்க் எண்ணெய்த் தொட்டியில் விழுந்த நபர் மற்றும் அவரை காப்பாற்றச் சென்ற மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.  இந்த பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணைய் சேமிக்கும் தொட்டியை  மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ப்படும்.

இந்த நிலையில், இன்று காலை 3 பேர் எண்ணெய் சேமிப்புக் கிடங்கை சுத்தம் செய்ய சென்றனர். அதில் ஒருவர் கால் தவறி  எண்ணெய் தொட்டிக்குள் விழுந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற மேலும் 2 பேரும் தொட்டிக்குள் விழுந்தனர். மூன்று பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்,  தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராடி ஒருவரை உயிருடன் மீட்டனர். மேலும் 2 பேரை சடலமாக மீட்டனர். மீட்கப்பட்ட  நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments