Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரமத்தில் 3 பெண் துறவிகள் கற்பழிப்பு

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (10:34 IST)
பீகார் ஆசிரமத்தில் தங்கியிருந்த 3 பெண் துறவிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் போலிச்சாமியார்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாமியார் என்ற போர்வையில் சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வது, பாலியல் தொந்தரவு கொடுப்பது, பலாத்காரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 
 
இந்நிலையில் பீகார் மாநிலம் நவடா மாவட்டம் தாலி மோர் என்ற இடத்தில் சாந்த் குதிர் ஆசிரமத்தின் தலைவரும், சாமியாருமான தபஸ்யானந்தும், அவருடைய ஆட்கள் 12 பேரும் அசிரமத்தில் சங்கியிருந்த 3 பெண் துறவிகளை கூட்டாக கற்பழித்துள்ளனர்.
 
இதனையடுத்து 3 பெண் துறவிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின் 3 துறவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் தபஸ்யானந்தை தேடிச்சென்றபோது, அவரும், அவருடைய ஆட்களும் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து, ஆசிரமத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. அந்த சாமியார் மீது ஏற்கனவே பல கற்பழிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. போலீஸார் தலைமறைவாக உள்ள போலி சாமியார் தபஸ்யானந் உட்பட அவனது ஆட்கள் 12 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்