Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மருத்துவமனையை சேர்ந்த 3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:11 IST)
3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா
மும்பையில் உள்ள ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா தொற்று பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனையை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடினார்கள்
 
மும்பையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று ‘வோக்கார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர் 
 
இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் 3 டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த மருத்துவமனையை இழுத்து மூடினர் 
 
இந்த மருத்துவமனைக்கு உள்ளேயும், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் வெளியேயும் செல்ல அனுமதி இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியும் வரை இந்த மருத்துவமனை மூடப்பட்டிருக்கும் என்று மும்பை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் எப்படி பாதுகாப்பில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர் என்பது வியப்பாக இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments