Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.3 கோடி உண்டியல் வசூல் - திருப்பதியில் அதிகபட்ச வசூல்!

ரூ.3 கோடி உண்டியல் வசூல் - திருப்பதியில் அதிகபட்ச  வசூல்!
, செவ்வாய், 19 அக்டோபர் 2021 (13:00 IST)
பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலான நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 
 
இதனிடையே திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினசரி 30,000 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். திருப்பதியில் நேற்று 28,513 பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் ரூ.3.01 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
 
பிரம்மோற்சவ நாட்களில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையே உண்டியல் வசூலான நிலையில் தற்போது ரூ.3 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!