Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ம் கட்ட மக்களவை தேர்தல்..! 63.50 சதவீதம் வாக்குப்பதிவு..!

Senthil Velan
சனி, 27 ஏப்ரல் 2024 (10:01 IST)
நாடு முழுவதும் 88 தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 63.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
 
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) என 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன.
 
ஆனால் மத்தியபிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரண மடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. எஞ்சிய 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 63.50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக திரிபுராவில் அதிகபட்சமாக 79.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ALSO READ: ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்.! பெண் தோழியுடன் வாலிபர் கைது..!!
 
2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புனே விபத்து.. மகனை காப்பாற்ற தாய் செய்த தில்லுமுல்லு! போலீஸில் சிக்காமல் தலைமறைவு!

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

இந்த நிறுவனங்களின் காபி தூள் ஆபத்தானவையா? – உணவு பாதுகாப்புத்துறை அறிக்கையால் அதிர்ச்சி!

வெயிலோட உக்கிரம் தாங்க முடியல.. நிழல் ஏற்படுத்த அகமதாபாத் மாநகராட்சி செய்த பலே செயல்!

பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே ஆதார் எண் பதிவு..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments