Webdunia - Bharat's app for daily news and videos

Install App

135 சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 27வயது இளைஞர் கைது

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (19:32 IST)
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை திருடி பலரை ஏமாற்றிய 27வயது இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் விகாஸ் ஜா என்ற இளைஞர், பெண் ஒருவரின் கிரேடிட் கார்டு தகவல்களை திருடி ரூ.50 ஆயிரம் ஏமாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
 
பின்னர் ஜாமினில் வெளிவந்த விகாஸ் தொடர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். விகாஸ் மேல் சைபர் கிரைம் குற்றம் பிரிவின் கீழ் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சோதனை நடத்திய காவல்துறையினர் விகாஸிடம் இருந்து செல்போன்கள், ஒரு டெபிட் கார்டு, சிம் கார்டுகள் மற்றும் ரூ.17.70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். 
 
மின்னஞ்சல் முகவரி மூலம் வங்கி கணக்கில் மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் அவர்களது கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யும் போது தொடர்புடையவர்களுக்கு ஓடிபி எண் செல்லாது. இதனால் பணம் திருடப்படும் விவரம் அவர்களுக்கே தெரியாது.
 
இந்நிலையில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments