Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1500 பேர்: இந்தியாவில் 26,000+ கொரோனா பாதிப்பு

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (09:54 IST)
இந்தியாவில் ஒரே நாளில் 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு 30 லட்சத்தை நெருங்கியுள்ளது, 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,920,905 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 54,256 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,36,683 ஆக உள்ளது.
 
இந்தியாவை பொருத்த வரை நேற்று ஒரே நாளில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதோடு, கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது, அதேபோல கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,210 லிருந்து 5,804 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments