Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை

kerala
Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (19:42 IST)
கேரளம் மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில்  நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், இருவழக்குகளிலும் முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 204 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26  மாதங்கள் சிறை என்று என்று உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்..!

மக்களின் குறைகளை நிறைவேற்ற வக்கில்லாத திமுக அரசு, ஒரு Coma அரசு! ஈபிஎஸ் ஆவேசம்..!

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகம்! கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்