சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (19:42 IST)
கேரளம் மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 204 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பதனாபுரம் பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் சிறுமியின் 3 வயது தங்கை இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வினோத் என்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு அங்குள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில்  நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், இருவழக்குகளிலும் முறையே 100 மற்றும் 104 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 204 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.4.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26  மாதங்கள் சிறை என்று என்று உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்