Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:48 IST)
கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின் கேள்வித்தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழை இருந்ததால் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து மதுரை ஐகோர்ட், தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் தரவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இந்த நிலையில் நீட் தேர்வின் போது, மொழிபெயர்ப்பு சரியாக இல்லையென கூறி தொடரப்பட்ட வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 2018 நீட் தேர்வு வினாதாளில் மொழி பெயர்ப்பில் இத்தனை தவறுகள் உள்ள நிலையில் எப்படி இந்த தேர்வை அனுமத்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை என சுப்ரீம் கோர்ட் சிபிஎஸ்சி அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் ஆங்கில அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தேர்வின் போது பொது அறிவையும் பயன்படுத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுரை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments