Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு தட்டுபாடு; விரைவில் 200 ரூபாய் நோட்டு அறிமுகம்

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு தட்டுபாடு; விரைவில் 200 ரூபாய் நோட்டு அறிமுகம்
, வியாழன், 20 ஜூலை 2017 (11:36 IST)
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ரூ.2000 நோட்டு புழக்கம் குறைந்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் விறையில் ரூ.200 நோட்டு புதிதாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
மத்திய அரசின் பண மதிப்பு குறைத்தல் நடவடிக்கைக்கு பின் புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ரூ.2000 மற்றும் ரூ.500 புதிய நோட்டுகள் புழக்கத்தில் வந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியில் இருந்து மற்ற வங்கிகளுக்கு அனுப்பப்படும் ரூ.2000 நோட்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ரூ.500 நோட்டுகள் அதிக அளிவில் விநியோகிக்கப்படுகிறது.
 
இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கி மற்றும் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவர உள்ளது என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையில்லாத முண்டமாக இருக்கிறது அதிமுக: ராதாரவி பாய்ச்சல்!