குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்.! டெல்லி அரசு அதிரடி உத்தரவு..!

Senthil Velan
புதன், 29 மே 2024 (15:43 IST)
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி மாநில அரசு தொடர்ந்து அரியானா மாநிலத்திடம் தண்ணீர் திறந்து விடக்கோரி வலியுறுத்தி வருகிறது. என்றபோதிலும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
 
இதனால் டெல்லி மக்கள் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்றும் தங்கள் கார்களை தண்ணீர் குழாய்களால் கழுவ வேண்டாம் என்றும்  மோட்டார்களால் தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தி இருந்தது.

ALSO READ: கேரளாவில் 24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!
 
இந்நிலையில் தண்ணீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

திருப்பதி உண்டியல் எண்ணும் மையத்தில் ரூ.100 கோடி முறைகேடு.. புகார் கொடுத்தவர் மர்ம மரணம்..!

72 மணி நேரம் உழைத்தால் தான் சீனாவுடன் போட்டி போட முடியும்: நாராயண மூர்த்தி

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments